5/30/2013

பார்த்தால் சொல்லுங்கள்

இன்று காலையில்தான்
விடுதி வாயிலில்!
அவர் யாரோ
நான் யாரோ
புன்னகைத்தார்;
நானும் புன்னகைத்தேன்!
ஒருவரையொருவர்
கடந்து சென்று
சற்றுத் தொலைவு
வந்தவுடனே
திரும்பிப் பார்த்தேன்;
அவரும் திரும்பிப் பார்த்தார்!!
அவரும் உயர்த்திய கையை
அசைத்துக் கெழுமையூட்ட
அதே நேரத்தில் நானும்
உயர்த்திய கையை அசைத்து 
வந்து விட்டேன் அதே பாங்குடன்!
ஏனோ தெரியவில்லை இன்னும்
அவரது நினைவில் நானிருக்க 
இணையத்தில் எழுதுகிறேன்!!
பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்
அவரும் இணையத்தில் எங்காவது 
என்னைப் போலவே என்னைப்பற்றி
எழுதிக் கொண்டிருக்கக் கூடும்!!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... எழுதிக் கொண்டிருக்கலாம்...!

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...