9/23/2012

உயிர்த் துடிப்பு


ஊர்ல மழையா?
அத்தைக்கு கால்ல வெடிப்புன்னாங்க??
ஓரிரு கேள்விகளோடு
உள்ளே சென்ற நீ
சிலமணித்துளிகளில்
திரும்பி வந்து
காப்பியைத் தருகிறாய்!!
கதவுநிலவுக்கப்பால்
பாதியாய் நீ ஒண்டியிருக்க
கொடுத்த காப்பியை
குடித்துக் கொண்டே
அங்கிருந்த குமுதத்தை
வெறுமனே புரட்டுவதில் 
சில கணங்கள் கழிந்தன!!
சரி நான் கிளம்புறேன்
மாமா வந்ததும் சொல்லிடு 
வாசலுக்கு வந்ததும்
நீ கேட்டது 
இன்னும் காதுகளில்!!
இன்னெப்ப வருவீங்க?!

No comments: