9/10/2012

தாயு”மவள்”

 நிழல் நீண்டுவிழும் நேரம்
வீட்டுப்புறக்கொல்லையில்
அசைவற்றிருந்த ஊஞ்சல்
இயங்கப் பெருவேட்கையோடு
முகமலர்ந்து காத்திருக்கிறது
அன்று வந்திருந்த அஞ்சல் உறைகள்
போகிற போக்கில் திறக்கப்படுகின்றன
சென்று கொண்டிருந்தேன்
தெருமுனையிலிருக்கும்
பேருந்து நிற்குமிடம் நோக்கி
அவளின் வரவுக்காய்!
முனை சென்று சேருமுன்னம்
அவளே எதிர்கொண்டு பின்னர்
நேர்கொண்டோம் நாங்கள்
பிறந்தன கணைகள் பல
நானே வந்திருப்பனே?
காய்ச்சல் நல்லாயிடுச்சா??
மத்தியானம் சாப்பிட்டீங்களா??
கொஞ்சமாச்சும் தூங்கினீங்களா இல்லையா??
என் பையை நான் தூக்கிக்கமாட்டனா??
நாளைக்கு வேலைக்குப் போகணுமில்ல?!
அடிக்கடி நிறைய தண்ணி குடிங்க!!
தாயு”மவள்”!

No comments: