8/31/2010

அமெரிக்கத் தலைநகரில் இருந்து அரசி நகருக்கு...

உள்ளூர்ப் பயணிகள் அனைவரும் அடித்துப் பிடித்து, பரிசோதனைகளை எல்லாம் செய்துவிட்டு, நுழைவுப் பரிகாரங்கள் அனைத்தையும் முடித்து ஆயாசமாய் அமர்ந்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த அயலகப் பயணிகளோ, வந்த களைப்பினூடாக, இந்த விமானத்தை கிளப்பித் தொலைத்தாலென்ன எனும் பாங்கில் நித்திரையின் பிடியில் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.


முதிர்கன்னியவள் முறையான அறிவிப்பை வெளியிடுகிறாள், “Flight US789 is ready to board; we ask those who need extra time and travelling with small children are to board at this time”.

அடுத்ததாக, முதல்வகுப்புப் பயணிகளும் அதிசாரிப் பயணிகளும்(frequent travelers) அழைக்கப்பட, ஒவ்வொருவராக உள்ளே சென்று அமர்கிறார்கள். இப்படியான பயணிகளை இறுதியில் அல்லவா அழைக்கப்பட வேண்டும்? சிறப்புச் சலுகை அளிக்கிறேன் பேர்வழி என்று, முன்னதாகவே அழைத்து அந்த குறுகிய இட்த்தில் போட்டு அடைப்பது என்பது சிறப்புச் சலுகையாகுமா?? அய்யகோ!!

மீதம் இருந்த பயணிகள் எல்லாம் எப்படி ஏறினார்கள், எவ்வளவு விரைவாக ஏறினார்கள் என்றெல்லாம் அவதானித்து இருக்கவில்லை நாம். விமானத்தின் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. விமான பணிப் பெண்களாக இருந்த அந்த இரு மூதாட்டிகளும் தத்தம் கடமைகளில் கருத்தாய் இருந்து, இங்குமங்குமாய் ஓடித் திரிந்தனர். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகள் எல்லாம், தத்தம் நிறுவனங்களுக்கு குறுந்தகவல்களை தடதடவென அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மூதாட்டிகளில் ஒருத்தி, விமான ஓட்டிகளின் கருவறையின் கதவை இழுத்திச் சாத்திவிட்டுத் தீர்மானமாய்ச் சொன்னாள், “விமானத்தின் எடையானது சமச்சீராக இல்லை. முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் யாராவது ஒருவர், விமானத்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தாலொழிய விமானம் புறப்பட வாய்ப்பில்லை; தன்னார்வலர் யாரேனும் உதவலாமே?” என்றாள்.

முதல்வகுப்புச் சீமான்களும் சீமாட்டிகளும் தத்தம் வேலைகளில் மூழ்கி இருப்பதைப் போல பாசாங்கு செய்தார்கள். யாருக்கும் அறிவிப்பானது காதில் விழுந்தது போலத் தெரியவில்லை. சிறிது ஏமாற்றத்துடன், குரலைச் சற்று உயர்த்தியபடி மீண்டும் அலறலானாள் விமான வரவேற்பு மூதாட்டி.

அரைகுறை நித்திரையில் தலையை ஊசலாட விட்டுக்கொண்டிருந்த அவன், திடீரென வெகுண்டவனாய், “என்ன? என்ன??” என வினவினான். மூதாட்டி விபரத்தைச் சொல்லவும், சற்றும் தாமதியாது விமானத்தின் கடைசி இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். மீதமுள்ள முதல்வகுப்புப் பயணிகளோ, “கேனப்பய... கேனப்பய... முதல்வகுப்பு விருந்தோம்பலை வுட்டுட்டு கடைசி இருக்கைக்குப் போறாம் பாரு கேனயன்” என நினைத்து எக்காளமாய் உள்ளூரச் சிரித்தார்கள்.

விமான ஓட்டியின் சமிக்கைக்குப் பிறகு, மூதாட்டியானவள் ஆயத்த அறிவிப்புகளைச் செயல்முறையோடு ஒப்புவித்தாள். எப்படி இருக்கைப் பட்டையை அணிய வேண்டும், தற்காப்புச் செயல்கள் எப்படியாக அமைய வேண்டும் என்றெல்லாம் செய்து காண்பித்தாள். நூற்றில் ஒருவராவது இதைக் கவனமாக்க் கேட்கிறார்களா என்பது வினவுதலுக்கு உரியதே.

விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பி, வழமைக்கு மாறாகச் சற்று முன்கூட்டியே சென்று சேர வேண்டிய இடமான, அரசி நகரமாம் ஃசார்லட் நகரின் விமான நிலைய ஓடுபாதையில் இறங்கிச் சீறி, தவழ்ந்து, பின் நிலைக்கு வந்து சேர்ந்து நின்றது. நின்றதுதான் தாமதம், அனைவரும் ஒருங்கே எழுந்து நின்று, தடதடவென பெட்டிகள் இருக்கும் ஒருங்கின் கதவுகளைத் திறக்கலானார்கள். கடைசி இருக்கையில் இருக்கும் அந்த கேனயன் மட்டும் இன்னும் நித்திரையில்.

முதல்வகுப்புப் பயணிகள் த்த்தம் மேலங்கியை விமானப் பணிப் பெண்ணிடம் கேட்டு வாங்கினார்கள். மற்றவர்கள், த்த்தம் அலைபேசிகளில் வினையாற்றத் துவங்கினார்கள். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகளோ, அனைவருக்கும் முன்பாக வெளியே சென்றுவிடலாம் எனும்பெருமித்ம்.

முன்கதவின் பார்வையாடியின் வழியாக, மின்பாலத்தை விமானத்தை ஒட்டி நிறுத்த வழிவகை செய்து கொண்டிருந்தாள் விமானப் பணிப் பெண். சரியாக்க் கொண்டு நிறுத்திய பின், முதல்வகுப்புப் பயணிகளை ஏளனமாய்ப் பார்த்தாள் அவள். பார்த்துவிட்டு அறிவிப்புச் செய்யலானாள்,

“I kindly request everyone to be seated in their seat… we got to let go the Gentleman first who helped us to get here… I request the Gentleman to come forward!!”, முதல்வகுப்பில் இருள் சூழ்ந்து தலைகள் கவிழ்ந்தன.

கடைசி இருக்கையில் இருந்தவனுக்கோ, ஒருவிதமான கூச்சமும் தயக்கமும். இருந்தாலும் எழுந்து, மெதுவாக முன்னேறத் துவங்கினான். அவன் முன்னேறி வருவதைக் கண்ட அந்த மூதாட்டி அவனைப் பார்த்து நன்றியுணர்வோடு முகைத்தாள். பதிலுக்கு அவனும் நன்றி சொல்லிவிட்டு நகர முற்பட்டான். அவளோ, அவனை அன்பாக ஆரத் (hug) தழுவினாள்.

வீட்டாரைத் தாயகத்தில் விட்டுப் பிரிந்து வந்தவனுக்கு, அந்தத் தழுவலானது மாமருந்தாக இருந்தது; அதில் உங்களுக்கும் பெருமைதானே? உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப் பதிவன் என்ற வகையில்!

8/23/2010

கோவை வலைப்பதிவர் முகநோக்கு - ஆக 23, 2010

நட்பு
எழில்மிகு இல்லம்
தம்பி சஞ்சய் மற்றும் தமிழ்ப்பயணி
மர வளமும் மூலிகை வளமும்
லதானந்த்
லதானந்த், மஞ்சூர் ராசா, வின்சென்ட் மற்றும் மூலிகை வளம் குப்புசாமி









சஞ்சய், மஞ்சூர் ராசா, வின்சென்ட், குப்புசாமி, சிவா,
ஓசை செல்லா, வடகரை வேலன், லதானந்த்
சஞ்சய், மஞ்சூர் ராசா, மரவளம் வின்சென்ட், மூலிகை வளம் குப்புசாமி, ஓசை செல்லா
பழமைபேசி, வடகரை வேலன் மற்றும் லதானந்த்

பதிவர் முகநோக்கு நிகழ்வுக்கு அச்சாரமிட்ட அண்ணன் மஞ்சூரார், உதவிய சஞ்சய் மற்றும் வருகையளித்தோருக்கு நன்றி!!!

8/20/2010

எல்லாமும் உண்பதுவே!!!

Italy
Spain
Lebenon
Australia
Korea
Indonesia
China
Vietnam
Switzerland
Brazil
Japan
India
Greek

மின்னஞ்சலில் அருண் அவர்களிடமிருந்து....

8/19/2010

வம்சம்


இன்றைய பொழுது திரைப்படத்துடன் நல்லவிதமாக, இனிமையான பால்ய காலத்து நினைவுகளுடன் கழிந்தது. மகளின் விருப்பத்திற்கிணங்க, ’வம்சம்’ எனும் திரைப்படத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

கதை, திரைக்கதை, நடிப்பு இவற்றைப் பற்றி எல்லாம் சொல்லும் அளவிற்கு நாமொன்றும் திரைப்பட விமர்சகரோ அல்லது பண்டிதரோ அல்ல. நமக்கும் திரைப்பட இரசிப்புக்கும் வெகு தூரம்.

கொடுத்த என்பத்து ஐந்து ரூபாய்க் கட்டணத்துக்கு அதிகமாகவே, படத்தை இரசித்து மகிழ்ந்தோம். கிராமியத்தைத் தழுவின கதை என்பதால், படம் பிடிப்பதற்குத் தெரிவு செய்த இடங்கள் மிகவும் அம்சமாக இருந்தது. இன்றைய யுகத்தில், இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றனவா? இன்னும் எனக்கு வியப்பாகவே உள்ளது.





தோட்டத்து வீடு, வயல் வெளி, ஊருக்குள் இருக்கும் வீடுகள் என்பன ஒவ்வொன்றும் கிராமியத்தை வெகு துல்லியமாக எடுத்துக் காட்டின என்றால் மிகையாகாது. கதையோட்டம் மற்றும் உரையாடல்களை அவதானிக்காது, பின்னணிக் காட்சிகளை மட்டுமே கண்டு களித்தோம் நாம்.

தமிழுக்கேற்ற உச்சரிப்பு அறவே இல்லாமல், சுரத்துக் குறைந்து வெளிப்பட்ட உரையாடல் அவ்வப்போது அயர்ச்சியைக் கொடுத்தது. பாடல்கள் மற்றும் சிரிப்புக்காக வைக்கப்பட்ட காட்சிகள் எதுவுமே எடுபடவே இல்லை.

புதுமுக நடிகர் என்பது எளிதில் புரிகிறது. என்றாலும், கதாபாத்திரத்திற்கேற்ற தோற்றமும் நடையும் சிறப்பாக இருந்தது. கதாநாயகியின் உச்சரிப்பும், குறிப்பு மொழியும் படத்திற்கு பெரும்பலவீனம்.

வயல்வெளி, புங்கை, வேம்பு, ஆல், இலவம், அரசன் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், குறிப்பாக இறகுகளுடன் பறந்து வரும் வெடத்தலாங்காய் போன்றவை நம் பால்ய காலத்து நினைவுகளை மீட்டெடுத்தன. வெளியே வரும் போது மனம் நிறைவாக இருந்தது. பின்புலக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்காகவாவது இப்படத்தைப் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 3000 பேர் அமர்ந்து படம் பார்க்கக் கூடிய வளாகத்தில், சில நூறு பேர் மட்டும் குழுமியிருந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ஆனால், வெட்டுக்குத்து இல்லாத தமிழ்ப் படத்தை பார்க்கும் பாக்கியம் அடுத்த முறையாவது கிட்டும் என நம்புவோமாக!!

INFOSYS in Kuwait soon which will be called as " COBRA TOWERS ".






8/18/2010

கோவைத் தென்றலின் ஒரு மாலைப் பொழுதில்....





இனிய மாலைப் பொழுதில், பதிவுலக நண்பர்களுடன் ஒரு அளவளாவல்....

ஓசைச் செல்லா, வெங்கட் மற்றும் இதழியல் நண்பர்கள்
பதிவர் சங்கமேசுவரன், பதிவர் வின்சென்ட், சஞ்சய்
வடகரை வேலன், தமிழ்ப் பயணி சிவா, வசந்த்

தமிழ்ப் பயணி சிவா

பத்து மீட்டர் இடைவெளி விடுறதாம்...
பத்து வாகனங்களைக் கொண்டாந்து உள்ள சொருகிட மாட்டாங்க??

8/17/2010

காந்தி பூங்கா

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பென்றால், பைக்கட்டுகளுடன் நீலநிறச் சீருடைகளும் காக்கி வெள்ளைச் சீருடைகளும் வீதிகளில் எறும்புகளாய் ஊர்ந்து சென்று மறைந்த நேரம் என எழுதலாம். ஆனால், இதுவோ நவீனயுகம். ஆம், பக்கத்து வீட்டு வாண்டுகள் அடைபட்ட கூண்டுக்குள் இருந்து வெளியேறிப் பாயும் கோழிகள் போல, அச்சிறு வாகனத்துள் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறிக் கொண்டிருந்தன.

மிடுக்காய் சீருந்துக்குள் அமர்ந்து, கால்களை நீட்டிப் பார்த்துக் கொண்டேன். குறிப்பறிந்து நம் வாகன் ஓட்டியண்ணன், “போலாமா கண்ணூ?”

“ம்ம்... போலாங்ணா...”

கோயமுத்தூர், செல்வபுரத்து ஒதுக்குப்புறத்தில் குடி கொண்டிருக்கும் பால்ய நண்பன் வினாயக மூர்த்தியைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கச் செல்கிறேன். திருமணத்திற்குக் கூட நேரில் சென்று அழைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அவனும் எதோ ஒரு சப்பைக்கட்டுக் காரணம் ஒன்றின் முகாந்திரம், என் திருமணத்திற்கு வந்திருக்கவும் இல்லை.

அவனைப் பிடித்து, இவனைப் பிடித்து எவன் ஒருவனையோ அறிந்து கொள்ள முற்பட்டதில் வந்து அகப்பட்டவன் வினாயகமூர்த்தி. உறவைப் புதுப்பித்து, முன்னொரு காலத்திய வைர நிகழ்வுகளைத் தீட்டுவதில் மிளிர்கிறது பேரின்பம்.

தீட்டியதில் விடுபட்டுப் போனவற்றை தோய்த்துப் பளிச்சிடத்தான் இப்பயணம். நடப்பதை எல்லாம் அசை போட்டுக் கண் விழித்ததில், வாகனமானது கண்பதி, நூறடி சாலை, வடகோவை மேம்பாலம் கடந்து, இரத்தின சபாபதி புரம் திவான் பகதூர் சாலையில் இருக்கும் வினாயகர் கோவில் சமீபம் மெதுவாக உருள்வதை அவதானிக்க முடிந்தது.

”மொதல்ல எல்லாம் இங்க வந்தா, எதோ வெளிநாட்டுக்கு வந்த மாதர இருக்கும்?”

“ஆமாங் கண்ணூ, இப்ப எங்கியுமு சனங்க கூட்டந்தேன்!”

“பொட்டி, பொட்டியா... எத்தனை வண்டிக?”

“அட, இந்தப் பொட்டிக தேவுல கண்ணூ... நுழம்புகளாட்ட, இந்த மோட்டார் பைக்குல வாறவிங்க அழும்பு, பெரிய அழும்பு கண்ணூ?”

“அப்படிங்ளா?”

“அதுல போவான்... இதுல போவான்... எத்தனை எடம் இருந்தாலும் நட்ட நடுவுல போவான்... ஊட்ல இருந்து கிளம்புனா, சீச்சீன்னு போயிருது”

வாகனமானது காந்தி பூங்கா திருப்பத்தில் திரும்பவும், அங்கே ஒரு சிறு பெண் குழந்தையானவள் எமது கவனத்தை ஈர்த்தாள்.

“அண்ணா, சித்த நில்லுங்க”

வாகனத்தை விட்டிறங்கி, நாமும் ஒரு ஓரமாய்ப் போய் நின்று கொண்டோம். உருளைக் குச்சியை வைத்து வித்தைகள் பல காண்பித்தாள் அவள். ஒரு சேர பல வினைகளை ஆற்றிக் காண்பித்தாள். உருளைக் குச்சிகள் அந்தரத்தில் சுழல்கிறது. வளையங்கள் உருளைக் குச்சிகளின் நடுவே புகுந்து, புறப்பட்ட இடத்திற்கே வந்து லாவகமாய் இவளின் கைகளில் புகுந்து கொள்கிறது.

சாமன்யனாக வீதியில் இறங்கினால், ஒரு சில ரூபாய்கள் மட்டுமே இடம் பெயர்கிறது. இதுவே கண்கவர் வணிகமயமாதலோடு இவள் இறங்கி இருப்பின், யாருக்கோ, எவருக்கோ இடம் பெயரும் எண்ணிலடங்கா ரூபாய்கள். புன்முறுவலோடு காட்சியைத் தவறவிடாமல் இரசித்துக் கொண்டிருந்தோம்.

“அண்ணா, நீங்களும் வந்துட்டீங்களா? வண்டீ??”

“அந்தப் பக்கமா நிலுத்தி இருக்குறங் கண்ணூ!”

“இன்னுஞ்சித்த இருந்து பாத்துட்டுப் போலாங்ணா!”

கொழுகொழு வாத்து ஒன்று வாலை வாலை, ஆட்டி ஆட்டி, ஒய்யாரமாய் நடந்து வந்து விரிந்திருந்த வண்ண விரிப்பின் மேல் ஏறி நின்றது. வீரவேலன் வருகிறார், வீரவேலன் வருகிறார் எனும் அறிவிப்போடு தோன்றினான் வீரவேலன். அவனது தோற்றம் மிடுக்காய், நிமிர்ந்த நடையோடு வசீகரித்தது நம் மனதை.

வறுமையில் வாடினாலும், தொழிற்சிரத்தையின் கண் முன்னின்று வடிவாய் வந்து நின்றனர் இரு மங்கையர், ஆளுக்கொரு பக்கமாய். தலையில் தொப்பி, நல்லதொரு சொக்காய் என சலங்கைச் சத்தத்தோடு குதித்துக் குதித்து வந்தது கதாநாயக மந்தி.

மங்கைகள், நீண்ட குச்சியை குறுக்காகப் பிடித்துக் கொள்ளவும், நையாண்டி தோன்றினான். தோன்றின வேகத்தில், “குமார் வேலப்பா, உன்னால் இதைத் தாண்ட முடியுமாடா?” என உரக்கக் கத்தினான்.

அனாயசமாய், இருந்த இடத்திலிருந்து உயரப் பறந்து அக்குச்சியினின்றும் மேலாகச் சென்று குதித்தான் மந்தி குமார் வேலப்பன். குதித்து விட்டு, கைகளை ஆட்டி ஆட்டி, நையாண்டி செய்தான் எங்கோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த வீரவேலனை நோக்கி.

வீரவேலனுக்கு வந்தது சினம். இரு கைகளால் தன் மார்பை அடித்துக் கொண்டான். அதைப் பார்த்த, குமார் வேலப்பன் மேலும் மேலும் நையாண்டி செய்தான். கூடி இருந்த குழுமத்தினர் ஆரவாரத்தோடு ஆர்ப்பரித்துச் சிரித்த்ணாற். எமக்கோ, உற்சாகம் கரை புரண்டது.

வீரவேலன் ஓடோடி வந்து பல்டி அடித்து, மங்கையர் இருவரும் உயரப் பிடித்திருந்த குச்சியினின்றும் மேலாகப் பாய்ந்து தாவினான். அது கண்ட, குமார் வேலப்பன் கீழும் மேலுமாய்க் குதித்து வீரவேலனைக் கேலி செய்தான்.

அதே நேரத்தில் மங்கயர் இருவரும் பெரிய வளையத்தை ஏற்றிப் பிடித்தனர். வினாடி கூடத் தாமதிக்காது, அதில் லாவகமாய்ப் பாய்ந்து தாவினான் மந்தி குமார் வேலப்பன். கூட்டத்தினர், ஓவென்று ஓலமிட்டனர்.

வீரவேலனோ, பெருத்த அவமானமாய் உணரலானான். உடலை நெட்டி முறித்தான். தலை மூடியைக் கோதி, கொண்டை இட்டுக் கொண்டான். குதித்து, பின் ஓடோடி வந்து வளையத்துள் நீட்டமாய்ப் பாய்ந்து, கைகளால் ஊன்றி பல்டி அடித்து, நிலை கொண்டான். பார்த்த மக்கள், பரவசத்துள் படர்ந்தனர். நாலாபுறமும் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது.

மங்கையர் இருவரும், வளையத்தைச் சுற்றி இருந்த துணியைப் பற்ற வைத்தனர். வளையம் தீப்பத்து போலக் காட்சி அளித்தது. மந்தி குமார் வேலப்பன் மீண்டும் பாய்ந்து தாவினான். அவனைத் தொடர்ந்து வீரவேலனும் பாய்ந்து தாவினான். இப்படியாக, வளையத்தின் அளவுகளைச் சிறிதாக்கிக் கொண்டே வந்தனர் அம்மங்கையர்.

இறுதியாக, சிறு அளவிலான வளையத்தைப் பற்ற வைத்து ஏற்றிப் பிடித்தனர். சிறு, தயக்கத்திற்குப் பின் இருவருமே பாய்ந்து சாகசத்தை வெளிப்படுத்தினர். அதைக் கண்டு ஏமாற்றமுற்ற மங்கையர் இருவரும், மேலும் சிறு குறுகிய வளையத்தைப் பற்ற வைத்து, ஏற்றிப் பிடித்துப் புன்னகைத்தனர்.

ஆர்ப்பரித்த மொத்தக் கூட்டமும், அசையாது அமைதியாய் நின்றது. இச்சிறு வளையத்துள், அதுவும் கனல் கக்குகிற இவ்வளையத்துள் எப்படி, மந்தியும் மனிதனும் புக இயலும்? எல்லோரும் யோசித்தபடி நின்று கொண்டிருந்தனர். சுற்றி இருந்த, மொத்த காந்தி பூங்காவும் இவர்களை நோக்கித்தான்.
Gandhi Park To Gandhi Park எனச் சுற்றி வரும் ஏழாம் இலக்கமிட்ட பேருந்துகள், சுற்றுவதை நிறுத்திவிட்டுக் காத்திருப்பில்.

மந்தி. குமார் வேலப்பன், சுழட்டிச் சுழட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருந்தான். திடீரென, வீர வேலன் முன்னே தோன்றி, இஃகிஃகி எனச் சிரித்துச் சிரித்து எரிச்சல் மூட்டினான். தன் வாலால் கேலி பேசினான். மக்கள், இறுக்கத்தினின்று தளர்ந்து நகைக்க வெளிப்பட்டனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், குத்தீட்டியாய் உடலை நீட்டி, ஊசி போல அச்சிறு வளையத்துள் பாய்ந்து மறுகோடியில் இருக்கும் கூட்டத்தினர் முன் போய் விழுந்தான் மந்தி. குமார் வேலப்பன். தெரு முழுதும், கரவொலியும் கூக்குரலும் ஓவென பேரிறைச்சலை உண்டாக்கியது. பார்த்தோர் அனைவரும், குதூகலத்துள் ஆழ்ந்து போயினர்.

மந்தி. குமார் வேலப்பன் நேராக வீரவேலன் முன்னே வந்து சேட்டைகள் செய்ய ஆரம்பித்தான். கூட்டத்துள் இருந்த விடலைகளும் வாண்டுகளும் உடன் சேர்ந்து எக்காளத்தை வெளிப்படுத்தினர். மற்றவர்களோ, செய்வதறியாது நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீரவேலன், தன் மெளனத்தை உடைத்து கூட்டத்தின் மையப் பகுதிக்கு முன்னேறினான். அஃகஃகாவென ஓங்கிச் சிரித்து, தனக்கு விடப்பட்ட சவாலை அலட்சியப்படுத்தும் நோக்கில் இளக்காரமாய்ப் பார்த்தான் அனைவரையும்.

“இந்தக் குரங்குக்கு முன்னால் நான் தோற்பதா? அஃகஃகா... இந்தச் சிறு வளையத்துள்தானே அது உள்ளே புகுந்து தாவிக் கரணம் அடித்தது?? அது என்ன பிரமாதம்??! இதோ, நான் எந்த வளையமும் இல்லாமற் தாண்டுகிறேன்... அஃகஃகா!”, என ஆர்ப்பரிக்கவும், மங்கையர்கள் பிடித்திருந்த சிறு வளையம் கீழே இறங்கியது. வீர வேலன் ஓடோடி வந்து, பாய்ந்து, அனாயசமாய்ப் பல்டி அடித்தான்.

கரவொலி விண்ணை முட்டியது. கூட்டத்தினர், தத்தம் பைகளில் இருந்த காசு பணத்தை வாரி வழங்கினர். நல்லதொரு கலையை இரசித்த நாமும் நம்மால் ஆனதைக் கொடுத்து மகிழ்ந்தோம்!!!

8/16/2010

இன்றைய நாள் இட்டேரியோடு!!!

புறக்கொல்லை... அம்சமா இருக்கு!
தமிழுக்குத் தட்டுப்பாடு?!
நல்லாத் தமிழ் வளர்க்குறாய்ங்க?!

நீலவானமும் நீலமலையும்
இட்டேரி
கற்றாழையும் வேம்பும்
கொட்டைமுத்துச் செடி(ஆமணக்கு)
மதுக்கரை ACS
பூவேந்தர் மலை
தோப்பு, ஆனா கள்ளு இல்லை
உண்டி வில்
தட்டக்கூடை
நாயுருவி
பட்டாம்பூச்சித் தழை
துண்ணூர்ப்பத்தினி
மருதாணிச் செடி
துத்திச் செடி
ஆயா மரம்
சுள்ளிக் கற்றாழை
காரச்செடி (அ) கிளுவஞ்செடி
நாயினன் செடி
கொஞ்சம் மழை வந்தாத் தேவலை!!
சீதாப் பழம்
காந்தள் செடி (குள்ளநரிப் பூ)
தூதுவளை?
பிரண்டை
பிரண்டை