12/29/2009

நீலமலை ஓரம்

பஞ்ச கல்யாணி
தேர் முட்டாய்
அச்சு முட்டாய்
குச்சி முட்டாய்
யானை முட்டாய்
வெங்காய முட்டாய்
கிளி சோசியம்
பாக்கு மரம்
பத்து ரூவாய்க்கு, வாழ்த்துச் சங்கொலி

தொரத்தி மரம், வேண்டுதல் நிறைவேற தொட்டல் கட்டணும்
பவானி
பரிசல் ஓடுன இடத்துல, நெல்லித்துறை பாலம் இப்ப!

12/24/2009

பள்ளயம் - டிச 24, 2009


எமக்குப் பிரத்தியேகமாகக் கையளிக்கப்பட்ட ஒட்டு வில்லை. இனிதான் நாம உலா வர்ற வண்டியில ஒட்டணும். எல்லாம் கிட்ட இருக்குற கழகப் புள்ளிகளோட கைங்கர்யந்தான்! இஃகி!!

==================================


இது நம்ம டோண்டு ஐயா அவர்களுக்கான சிறப்புப் படம். ஆமாங்க, படத்துல இருக்குற இவர்தான் நாம எழுதின சிறுகதைத் தொகுப்புல வந்த பேச்சியோட வழித் தோன்றல்!

==================================



சார்லட்ல, எனக்கு அருகண்மையில இருக்குற சகபதிவர் கல்விமான் சீமாச்சு, ஒரு பள்ளிக்கூடத்தை மேம்படுத்துறதுக்கு ஐந்து கோடின்னு ஒரு இலக்கை வெச்சி, செயல்பட்டுட்டு இருக்காரு. முழுக்க முழுக்க சமுதாய மேன்மைக்காக மட்டுமே நடத்தப்படுகிற காரியம் அது.

இங்க வந்தா, அன்பரும் சகபதிவருமான ஆருரன் அவர்களும் அதையேதான் செய்துட்டு இருக்காரு. அவங்க பள்ளியப் பார்த்தே ஆகணும்னு அடம் புடிச்சிப் பார்த்துட்டு வந்தேன். வாழ்க பதிவர்கள்! வளர்க அவர்கள்தம் தொண்டு!!

==================================

நேற்றைக்கு வீட்டுக்கு தெரிஞ்சவங்க வந்திட்டு இருக்காங்கன்னு சொன்னவுடனே, எத்தனை பேர் வர்றாங்கன்னு கேட்டோம். அவரும், அவரோட பொண்டாட்டி ரெண்டு பேரும் வர்றாங்கன்னு பதில் வந்துச்சு. நாமளும் மேலதிகமா மூனு இருக்கைகளை எடுத்துப் போட்டோம்.

“இப்ப எதுக்கு இங்க எச்சா ஒரு இருக்கையப் போட்டு இருக்கீங்க?”

”அவரும், அவர் பொண்டாட்டி ரெண்டு பேர்னு சொன்னீங்களே?”

”அடக் கடவுளே! அவரும் அவர் பொண்டாட்டியுமா மொத்தம் ரெண்டு பேர் வர்றாங்கன்னு சொன்னேன்! அவர் ஒன்ன வெச்சிட்டே படாத பாடு பட்டுட்டு இருக்காரு பாவம், நீங்க வேற!”


“இஃகி!”

==================================

படிச்சவங்ககூட, தான் பிறந்த தேதிய சர்வ சாதரணமா சொல்றாய்ங்க ஊர்ல... பிறந்த தேதி என்பது பேணிப் பாதுக்காக்க வேண்டிய தகவல்னு யாருக்கும் தெரியுறதே இல்ல. கணினி யுகத்துல இது அதிமுக்கியமான தகவல்யா.... அல்லாங்காட்டி, உங்களைப் பற்றின தகவல்கள் திருடு போக வாய்ப்பு இருக்கு!

அடுத்தது, குடும்பத்தாரோட நிழல்படங்கள், குறிப்பா குழந்தைகளோட படங்களை சரளமா இணையத்துல வுடுறாங்க; பதிவுல போடுறாங்க! மக்களே, சமூக விரோதிகளுக்கு ஏன் நீங்களே வாரி வழங்குறீங்க?! கணினிப் பயன்பாடு பற்றின விழிப்புணர்வு நெம்பக் கம்மி நாட்டுல!!

==================================


அன்பர்களுக்கு, நத்தார் தின நல்வாழ்த்துகள்!

12/22/2009

நன்றியுடன்...

மக்களே, எனக்கு சரியான இணைய வசதி இல்லாததால் பதிவுலகத்திற்கும் எனக்குமான இடைவெளி பெருகிக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஈரோடு ஆரவாரம் பற்றின இடுகைகளை வாசிக்கவில்லை.

எனினும் மாப்பு கதிர், அண்ணன் அப்துல்லா மற்றும் அமெரிக்க வாசகர் ஒருவரது அழைப்பின் வழியாக அறிந்து கொண்டேன். எனது சிற்றுரையைச் சிலாகித்தும் பாராட்டியும் சிலர் எழுதி இருக்கிறார்கள் என்றும் தெரியப்படுத்தினார்கள். எல்லாமும் ஈரோடு அன்பர்களுக்கே!

மகிழ்ச்சியாக இருந்தாலும் சிறிது வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. ஆம், நிறைய நண்பர்களுடன் முழுமையாகப் பேசவில்லையோ என்கிற ஒரு உணர்வு மேலிடுவதே அது.


மேலும் நான் மற்றவர்களை படம் எடுத்துக் கொண்டேனே தவிர, நான் அவர்களுடன் இருக்கும்படியாக எடுக்கவும் தவறி விட்டேன். அந்த மகிழ்வான சூழலில், மனம் ஒருவிதமான குதூகலத்திலும் நிறைவான லயிப்பிலும் இருந்ததே காரணம்.

என்னிடம் இருந்த படங்களை எல்லாம் வலையேற்றி விட்டேன். அவற்றில் நிறைய நண்பர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். மன்னிக்கவும்! மேலும் பின்னூட்டங்களுக்கு மறுமொழியவும் முடியவில்லை. எனது சூழ்நிலை கருதி பொறுத்துக் கொள்வீராக!!

12/20/2009

ஈரோடு வலைப்பதிவர் ஆரவாரம் - குறுந்தகவல்

வணக்கம் மக்களே, வணக்கம்! ஈரோடு வலைஞர்களும், பதிவர்களும், வாசகர்களுமாய்ச் சேர்ந்து ஒரு முன்னுதாரணத்தை உண்டு செய்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். குறித்த நேரத்திற்கு தேநீர் மற்றும் கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் துவங்கியது ஆரவாரம்.

பின்னர், விழா தொகுப்பாளர் கதிர்‍‍‍‍‍ ஈரோடு அவர்கள் நிகழ்ச்சியை தமிழ் வணக்கமுடன் முன்னுரைக்க, ஆருரன் விசுவநாதன் அவர்கள் தொகுத்தளிக்கப் பணிக்கப்பட்டார்.

பின்னர் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு வாழ்த்துரைக்க வந்த விருந்தினர்கள் எனப் பலரும் சிறப்பாகப் பேசினர். கிட்டத்தட்ட 100 பேர் பங்கேற்றனர். இது குறித்த‌ விளக்கமான இடுகை விரைவில் இடம் பெறும்.

சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமம் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்குத் தமிழ்ச்சமுதாயம் மிகவும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது!

http://picasaweb.google.com/nandhuu/121#5417378768878384114

ஈரோடு ஆரவாரம்: மேலதிகப் படங்கள்

12/19/2009

செந்தமிழ்!

சர்க்யூட்அவுசு காம்பவுண்டுல ஆபீசு
ஸ்காலர்கள் ஸ்டே செய்றதுக்கு ரூமுக
கொடிசியா ஹாலுக்கு போற ரோடு
த்ரீ மன்த்சுல ப்ரிட்ஜ் ரெடி ஆயிரும்
கெஸ்ட் ரிசீவிங் கமிட்டில அவரு மெம்பரு
நம்மாளு ஹெல்த் கமிட்டிப் பிரசிடெண்ட்
எல்லா காலேஜ் ஆசுடலும் ஹாலும் ப்ளாக் செய்தாச்சு
மாநாட்டு புக்ஸ்டால் கான்ட்ரேக்டுக்கு பேசணும்
பார்க்கிங் டெண்டர் பிக்சு ஆயிடிச்சி
தேர்டு டே ப்ரசென்ட்டேசன் நீ செய்யுற


ஆம், கோயம்பத்தூரில்
என்னைச் சுற்றிலும்
உலகத் தமிழ் செம்மொழி
மாநாடு வேலைகள்
துரித கதியில்!

12/17/2009

ஈரோடு மாநகரில் பதிவுலக ஆரவாரம்: நான் புறப்பட்டாச்சு, நீங்க?

தமிழ்மணம் பரப்ப,பதிவுலகக் கட்டமைப்பு எழுச்சி பெற, நமது நண்பர்கள் ஒருங்கிணைந்து நடாத்தும் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமத்துக்கு இன்னும் தயார் ஆகவில்லையா?வாருங்கள் நேருக்கு நேர் சந்திப்போம்! நேயம் வளர்ப்போம்!! எழுச்சி கொள்வோம்!!!

இலக்கியமா? சுவாரசியமா?? தமிழின உணர்வா?? நுட்பங்கள் அறிய வேண்டுமா??அப்படியானால், உடனே, உடனே தயாராகுவீர், ஈரோடு பதிவர் சங்கமம் நிகழ்ச்சிக்கு!

தாயகம் வந்திருக்கும் இந்நேரத்தில் நிகழ இருக்கும், இந்த சிறப்பான நிகழ்ச்சியைக் கண்ணுறப் போவதில் நான் மிகுந்த ஆவலாய் உள்ளேன். நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் தமிழ்மணம் திரட்டிக்கும் எமது உள்ளார்ந்த நன்றிகள்.

அழைத்த உடனேயே, கலந்து கொள்ள இசைவு தெரிவித்துக் கொண்ட அண்ணன், தமிழேந்தல் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்கட்கும் நன்றி! வந்து கலந்து கொள்ளப் போகும் உங்களுக்கும் நன்றி!!



சக நண்பர்களைக் கண்டு ஆர்ப்பரிக்க நான் புறப்பட்டாச்சு, நீங்க?

12/14/2009

இன்றும் இருப்பவை!

’அன்னாங்கால்’ போட்டபடி மச்சை மயில்சாமி!

இதுக்கும் நமக்கும் ஒரு வயசாமுங்க....... இன்னும் உழைச்சிட்டு இருக்குற ’தட்டு நறுக்கி’

வேலையற்றுப் போன ’வரப்பேரு’

பின்னிப் படல்... ஆட்டாங்கல், கழிதண்ணீர்க் கல்

அன்று, ’மல்லிசேரி’ இழுத்தூதுகள் பதுக்கப் புழங்கிய இடம்!


12/11/2009

மனநிறைவும் மகிழ்ச்சியும்!

டில்லியில் தமிழன்னை!
தமிழ்நாடு இல்லத்தில்!



அபிமான துள்ளுந்து, Bullet!

மக்களே, வணக்கம்! மனநிறைவோடு தாயகம் வந்து சேர்ந்தேன். தொலைபேசியில் அழைத்த அன்பர்களுக்கு நன்றி; நெடுநேரம் அளவளாவ இயலாமைக்கு பொறுத்துக் கொள்ளவும்.

வந்து சேர்ந்த உடனேயே டில்லி சென்றாக வேண்டிய அலுவல். அங்கே தமிழக அரசின் விருந்தினராக தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அனுபவம் மற்றும் மேலதிக‌ நிழல்படங்களை வாய்ப்புக் கிட்டும் போது இடுகையாக இட வேண்டும்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் பூனா நகருக்கு வந்திருந்தேன். அதன் பின்னர் தற்போதுதான் வங்து இருக்கிறேன். ஆக மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே எமது கோவை வாசம்.

கோவையிலே வளர்ச்சி என்பதை விட, டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக‌ ஓங்கி இருப்ப‌தைக் காண‌ முடிந்த‌து. மிக்க‌ ம‌கிழ்ச்சி.

12/05/2009

பள்ளயம் - 12/05/2009

போன வாரத்துல, நான் வேலை முசுவுல அல்லாடிட்டு இருந்தம் பாருங்க. அப்ப, சித்த வலையுலகத்துல என்னதான் நடக்குது, ஒரு எட்டுப் பார்க்கலாம்ன்னு ஒன்னு ரெண்டு வலைப்பூக்களுக்கு போனதுதான் தாமுசம், நம்ம பொட்டிக்கு வினை வந்திடுச்சுங்க. பெரும்பாடு சிறுபாடு ஆயிப்போச்சு.

காரணம் என்ன? நம்ம மக்கள் கண்ட கண்ட வில்லைகளை தன்னோட வலைப்பூவுல சொருகிக்கிறாங்க... அதுக மத்தவங்க பொட்டியப் போட்டுத் தள்ளிடுது. மக்க, சொன்னாலுங் கேக்குறது கிடையாது. நான் எப்பவும் கூகுள் வாசிப்பு நிரல்லதான் வாசிக்கிறது. அன்னைக்கு ஏமாந்து நேரடியாப் பூக்களுக்கு வந்துட்டன். அது என்னோட தப்புத்தான்! மக்களே, என்னோட வலைப்பூவைப் பாருங்க.... ஒகே ஒகட்டிதா உன்னாதி! இஃகிஃகி!!

ஏதாவது கிருமி நிரலிகள் இருந்தாக்க, முதல்ல அதுகளைக் கண்டு பிடிச்சு வேரோட அழிச்சிடுங்க. சமீபத்துல எனக்குத் தலைவலி கொடுத்த கிருமிக்குப் பேரு ohkcsysguard.exe. அதுக கணனியில எங்க குடி கொண்டு இருக்குன்னு கண்டுபிடிப்பது எப்படின்னு தெரிஞ்சிக்க இந்த சுட்டியைச் சொடுக்குங்க http://www.wikihow.com/Alter-Startup-Programs-in-Windows-XP மக்களே தயவு செய்து கண்ட கண்ட வில்லைகளைப் (widgets) பாவிக்காமத் தவிர்க்கப் பாருங்க!


========================================

இன்னைக்கு எங்க எழில் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவோட தமிழ் வகுப்புல தமிழ் சொல்லிக் கொடுத்திட்டு இருக்கும் போது, சிறுவர்களுக்கான கையேட்டுல “ஏ” எழுத்துக்கு உரிய சொற்களா, ஏணி, ஏணை அப்படின்னு போட்டு இருந்துச்சு. உடனே ஒரு குழந்தை கேட்டுச்சு, ஏணைன்னா என்னா? க்கும்! குழுவுல இருந்த பெரியவங்க யாருக்குமே அதற்கான அர்த்தம் தெரியலையே?! உங்களுக்குத் தெரியுமாங்க??

========================================



வட நாட்டுல, பறவைகளை எல்லாம் எப்படிப் புடிப்பாங்கன்னு தெரியுமாங்க? நண்பர் சுப்ரா இன்னைக்குதான் விசயத்தைப் பகிர்ந்துகிட்டாரு. நீளக் கயித்து நடுவுல ஒரு குச்சியில சிறுசா எதனா தின்பண்டத்தை வெச்சி நட்டுக் குத்தலாக்(vertcal) கட்டி, க்யித்தோட இரு முனையையும் மரத்துலயோ, நட்டு வச்ச கம்புலயோ கட்டி வெச்சிடுவாங்களாம்.

இந்தப் பறவையானது அந்தக் குச்சி மேல போயி உக்காரவும், பாரந்தாங்காமக் குச்சியானது மறுபக்கம் சாயவும் பறவை தலைகீழாத் தொங்க ஆரம்பிக்குமாம். குச்சியில இருந்து காலை எடுத்தா கீழ விழுந்துடுவோம்னு அதுக்கு பயம். கூடவே டபக்னு தலைகீழாத் தொங்க ஆரம்பிச்ச அதிர்ச்சியில, அதுக்கு சிந்தனையும் நின்னுடுமாம். அப்புறம் என்ன, குருவிக்காரன் போயி ஒரு சிரமும் இல்லாம அதைப்ப் புடிச்சி ஆட்டையப் போட வேண்டியதுதான்!

ஆக, உங்கள் சிந்தனைய உயிரோட்டமா வெச்சுக்க வேண்டியது முக்கியம் மக்களே முக்கியம். பிரபல எழுத்தாளர் சொல்றாரு, அவர் சொல்றாரு, இவர் சொல்றாருன்னு எல்லாம் நாம அவங்களோட பசப்புல மயங்கிடக் கூடாது பாருங்க. வாசிங்க, ஆனா அதைப் பல தரப்பட்ட கோணத்துலயும் அலசுங்க. தப்போ, சரியோ, சரியான முறையில விமர்சனம் செய்யுங்க.

பழமைபேசி அவ்வளவு எழுதி இருக்கான், இவ்வளவு எழுதி இருக்கான்னு ஒரு பெரியவர் சிலாகிக்கறார்; அதைக் கேட்ட இன்னொருத்தர், அதுக்கென்ன எருமை கூடத்தான் தினமும் நிறைய சாணி போடுதுன்னு விமர்சனம் செய்யுறார். அதையும் ஏத்துக்குற பக்குவத்தை நாமதான் உண்டாக்கிக்கணும். நிறைவாப் பேசுறதை ஏத்துக்குற மனசு, மாறாப் பேசுறதையும் ஏத்துக்கத்தான வேணும்?! இஃகிஃகி!


========================================

வட அமெரிக்க தமிழ் மக்களே, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன். அல்லாட்டி, நிச்சயமா டிசம்பர்-12 அன்னைக்கு, நியூஜெர்சி தமிழ் விழா விருந்துல கலந்துகிட்டு இருந்திருப்பேன். உள்ளூர்ல இருக்குற நீங்க முடிஞ்சாப் போயிக் கலந்துகுங்க.

We would appreciate if you could confirm your participation, and communicate by e- mail to natkuppuraj@yahoo.com or with any coordinators on or before Dec 9 .
Holiday party combined with our fund raising dinner for Thamizh Vizhaa 2010.

Date: December 12 th, 2009

Time: 4.30 p.m

Venue: Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

Event: CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

ஊர் மக்களே, நான் செவ்வாய்க் கிழமை(டிச-8) ஊருக்கு வர்றேன். மூனு வருசம் முன்னாடி வந்தேன். சிக்கன் குனியான்னு ஒரே களேபரம். இப்பவும் அதையே சொல்லி பயமுறுத்துறாங்களே? அவ்வ்வ்வ்.....


========================================

எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு!

12/04/2009

குழப்பி விடத்தான்!


நாளைக்கு ஊருப்பக்கம் போறம்ல? அதான், யாரும் நம்மைக் கண்டு பிடிச்சிடக் கூடாது பாருங்க.... இஃகிஃகி!!

பெருமைக்குச் சோறுகட்டி, புறக்கடையில் அவிழ்த்தானாம்!